ஆசிய விளையாட்டு: கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி!!
ஆசிய விளையாட்டில் ஆடவர் கிரிக்கெட் அரையிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தி , இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்
கிரிக்கெட் பிரிவில் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வங்கதேச அணி 96 ரன்கள் மட்டும் எடுத்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர் முடிவில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து இந்திய அணி 97 ரன்கள் எடுத்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தான்- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இந்திய அணி இறுதிப் போட்டியில் களமிறங்க உள்ளது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருப்பதால் மேலும் ஒரு பதக்கம் இந்தியாவிற்கு உறுதியாகி உள்ளது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.