நாமக்கல் மாவட்டம்: ராசிபுரம் தனியார் பொறியியல் கல்லுாரி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் என 57 பேர், தனியார் பஸ்ஸில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர்.
பின்நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் இருந்து நாமக்கலுக்கு புறப்பட்டனர். நள்ளிரவில் மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது, பஸ்ஸின் வலது பின்புற டயரில் தீப்பற்றியுள்ளதாக, பின்னால் வந்த வாகன டிரைவர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பஸ் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி, அனைவரையும் பஸ்சில் இருந்து அப்புறப்படுத்தினார். தீ பரவ துவங்கி, பஸ்சின் மேற்புறம் மற்றும் உட்புறம் முழுவதும் எரிந்தது.
மேட்டுப்பாளையம் மற்றும் அன்னுார் போலீசார் விரைந்து வந்து, தீயணைப்பு படையினருடன் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.