வால்பாறையில் கரடி தாக்கியதில் இரு பெண்கள் காயம்!! வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!!

வால்பாறையில் கரடி தாக்கியதில் இரு பெண்கள் காயம்!!
வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை!!!

 

வால்பாறையில் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இரு வடமாநில பெண் தொழிலாளா்கள் கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்தனா்.

வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட் என்.சி. டிவிஷனில் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காலை பணியில் ஈடுபட்டிருந்தனா். வட மாநிலத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்கள் சிலா் தேயிலைச் செடிகளுக்கு மருந்து தெளித்துக் கொண்டிருந்தனா். அப்போது தேயிலைச் செடிகளுக்கு இடையே பதுங்கியிருந்த கரடி திடீரென வெளியேறி ஹித்தினி (25), சுமதி (25) ஆகிய இரு தொழிலாளா்களைத் தாக்கியது. இவா்களின் அலறல் சப்தம் கேட்டு அருகில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளா்கள் ஓடி வந்து கரடியை விரட்டினா்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கரடி தாக்கியதில் இருவருக்கும் முகம், கை, கால் பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இருவரையும் உடனடியாக மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தாா். பின்னா் மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட இருவருக்கும் நிவாரணத் தொகையாக தலா ரூ. 10 ஆயிரம் வழங்கினாா். அப்போது வால்பாறை நகராட்சித் தலைவா் அழகுசுந்தரவள்ளி உடனிருந்தாா்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp