தமிழ்நாடு போலீஸ் அகாடமி சென்னை ஐஜியாக முத்துசாமி அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார். மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் முன்னால் மாணவரான இவரை கௌரவிக்கும் விதமாக கல்லூரி நிர்வாகம், முன்னாள் மாணவர்கள் சங்கம், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் பாராட்டு விழா மதுரையில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் அவர்கள் வரவேற்றார் கல்லூரி செயலாளர் தர்ம சிங் முன்னாள் மாணவரான ஐஜி முத்துசாமிக்கு அவர்களுக்கு பாராட்டுக்கு கேடயம் வழங்கி சிறப்பித்தார் மேலும் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ராஜசேகரன், முன்னாள் கல்லூரி முதல்வர்கள் முன்னாள் மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
விழாவில் ஐஜி முத்துசாமி அவர்கள் ” வாழ்க்கையில் வெற்றி அடைதல்” என்கிற தலைப்பில் பேசும்பொழுது;
“ஏழ்மை என்பது வாழ்க்கையில் நிலையானது அல்ல நான் சிறுவயதில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன் நீங்கள் செய்வதை தெளிவாக விரும்பி செய்தால் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடையலாம் ஏழ்மை கற்பதற்கு ஒரு தடையில்லை ஒரு செயலை செய்ய வேண்டும் என்று நினைத்தால் நிலைத்தன்மையும் தொடர் முயற்சியும்தான் மிக முக்கியம் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.” முடிவாக கல்லூரியின் சமூகப் பணித்துறை தலைவர் நிஷாந்த் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.