சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள செயிண்ட் ஜோசப் மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் முப்பெரும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சிவகங்கை மாவட்ட ஆயராக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பேரருள் தந்தை, முனைவர்.லூர்து ஆனந்தம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
விழாவில் செயிண்ட் ஜோசப் மகளிர் கல்லூரியின் செயலர், அருட்சகோதரி சூசைமேரி அவர்களுக்கு ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு அவருக்கு அனைவரும் வாழ்த்துக்கள் பரிமாறி, பரிசுகள் வழங்கினர்.
மேலும் விழாவில் திருச்சி மண்டலத் தலைவி அருட்சகோதரி. வேளாங்கண்ணி ஷெரின், அவரது சேவைகளுக்காகவும், பணிகளுக்காகவும் பாராட்டுப் பெற்றார். நிகழ்வில் கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முன்னதாக விருந்தினர்களை வரவேற்று கல்லூரியின் முதல்வர், அருட்சகோதரி, முனைவர்.மார்கரெட் பாஸ்டின் வரவேற்புரை ஆற்றினார். விழாவின் இறுதியில், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்.ஜோதி நன்றி உரை நவின்றார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.