கோவை சரவணம்பட்டி விசுவாசபுரத்தை சேர்ந்தவர் இளங்கோ டேனியல் (49). பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இவரை கடந்த 25ம் தேதி தாஸ்தாகிரி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு தான் மகாராஷ்டிராவில் இருந்து பேசுவதாகவும், தங்களது கம்பெனியில் 10 டன் செம்பு கம்பிகள் இருப்பதாகவும், அதனை மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு தருவதாகவும் தெரிவித்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை நம்பிய இளங்கோ டேனியல் ரூ. 53. 58 லட்சத்தை தாஸ்தாகிரி சொன்ன வங்கி கணக்கில் ஆன்லைன் மூலம் செலுத்தினார். ஆனால் பணத்தை பெற்றுக் கொண்ட பின்பு அவரிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. செம்பு கம்பிகள் அனுப்புவதாக கூறி ரூ. 53. 58 லட்சத்தை மர்ம நபர் மோசடி செய்ததும் தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.