கோவை பீளமேடு அருகே அவிநாசி சாலையில் புதன்கிழமையன்று அதிகாலையில் பிளஸ் டூ மாணவர் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் மேம்பால கட்டுமான பணியாளர் உயிரிழந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வேகமாக வந்த கார் சென்டர் மீடியனின் சிமென்ட் கற்களில் மோதி தீப்பிடித்து எரிந்தது. காருக்குள் மாட்டிக் கொண்ட பிளஸ் டூ மாணவனை அருகே இருந்த கட்டிடத் தொழிலாளர்கள் மீட்டனர். அந்த மாணவர் மீதும், காரை ஓட்ட அனுமதித்த அவரது தந்தை மீதும், காரை வைத்திருந்த தாத்தா மீதும் நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இறந்தவர் மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள ஜம்போனி கிராமத்தைச் சேர்ந்த அக்ஷய் வேரா (23) என அடையாளம் காணப்பட்டார். இவர் அவிநாசி சாலை உயர்மட்ட தாழ்வாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் கூறியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.