பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம் நடைபெற்றது!!

கல்வி மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து பெற்றோர்களிடம் விளக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்புக்கூட்டம், பள்ளி தலைமை ஆசிரியை ராணி தலைமையிலும் கோவில்பட்டி நகராட்சி 32வார்டு கவுன்சிலர் எம்.ஆர்.வி.கவியரசன் மற்றும் கோவில்பட்டி நகராட்சி 33வார்டு கவுன்சிலர் சண்முகராஜ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

முன்னதாக ஆசிரியர் உமாதேவி வரவேற்றார். தேர்தல் பார்வையாளராக விஜயாபுரி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை கலந்து கொண்டார். தொடர்ந்து, பள்ளி மேலாண்மைக் குழு அமைப்பதன் நோக்கம், முக்கியத்துவம், உறுப்பினர்களின் பொறுப்புகள், மாணவர்களின் கல்வி மற்றும் பள்ளி முன்னேற்றத்திற்கு செய்ய வேண்டிய கடமைகள் குறித்து பெற்றோர்களிடம் விளக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி மேலாண்மைக்குழு கட்டமைப்பின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட மொத்தம் 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டு, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் கல்வியாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர் அதனை தொடர்ந்து ஆசிரியர்கள் ஜெயசுதா சுமதி ஆகியோர் நன்றியுரை கூறினார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts