கோவை மாநகர பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். கோவையில் செயல்பட்டு வந்த மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் கீழ் உள்ள நிறுவனங்கள் பின்வருமாறு:
1. டிரீம்ஸ் மேக்கர் குளோபல் – கோவை, சாய்பாபா காலனியில் இயங்கி வந்தது.
2. ஆதித்யா கமாடிட்டீஸ் – கோவை ஆர். எஸ். புரத்தில் இயங்கி வந்தது.
3. எஸ்கேஎம் டிரேடர்ஸ் – கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கி வந்தது.
4. ஆனைமலை சிட்ஸ் – கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இயங்கி வந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிறுவனங்களின் இயக்குநர்கள் பொதுமக்களிடமிருந்து முதலீட்டைப் பெற்று அதிக வட்டி தருவதாகக் கூறி இதுவரை ஏராளமான நபர்களிடமிருந்து கோடிக் கணக்கில் மோசடி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக கோவை பொருளாதார குற்றப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் தகுந்த ஆவணங்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவை அணுகி புகார் தெரிவிக்கலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.