கோவை மாவட்டம் போத்தனூர் 99 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் இருந்து வந்ந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் சார்பில் அந்தப் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகளில் மூடப்படும் மூடிகள் மேலோங்கி நிற்பதாகவும் முதியவர்களும் குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் இதனை சரி செய்து தரதருவதற்கும் வேகத்தடை அமைத்து தருவதற்கும் மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா அவர்களிடம் எடுத்துக் கூறினர்.
உடனடியாக மாமன்ற உறுப்பினர் அதற்கு தேவைப்படும் பொருட்களான ஜல்லி,மண்,சிமெண்ட் ஆகியவற்றை உடனடியாக வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட சங்க நிர்வாகிகள் 15 பேர் அவர்களாகவே குழு அமைத்து அந்த சாலையை சரி செய்தனர். இதை உடனடியாக சரி செய்ய உதவிய மாமன்ற உறுப்பினருக்கு சங்க நிர்வாகிகள் பாராட்டுகள் தெரிவித்தனர்.
சங்க நிர்வாகிகளே ஒன்று சேர்ந்து இந்த பணிகளை செய்து முடித்ததற்க்கும் அப்பகுதி மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சங்கத்தின் தலைவர் R. மகேஷ்வரன், செயலாளர் S. இளங்கோவன், பொருளாளர் திரு.பொன்னுசாமி, துணை செயலாளர் ஜார்ஜ்,சுந்தரர்,புனிதன்,சுப்பிரமணி,வசந்தகுமார்,செல்வராஜ் ஆகியோர்.
பாராட்டுகளை தெரிவித்து கொள்வதோடு தாங்களே அந்த பணியை செய்து முடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தலைமை நிருபர்
-ஈசா.