சங்கரன்கோவில், நவ.6 சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த நவ. 2ம் தேதி சனிக்கிழமையன்று தொடங்கியது. கந்த சஷ்டி திருவிழா 4-ம் திருநாள் நேற்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை தொடர்ந்து மதியம் ஸ்ரீ சண்முகர் அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5:45 மணிக்கு தெற்கு ரத வீதியில் ஸ்ரீ சுப்பிரமணியர் செப்பு சப்பரத்திலும் வீரபாகு குதிரை வாகனத்திலும் எழுந்தருளல் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து ஸ்ரீ சுப்பிரமணியர் தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தென்காசி மாவட்ட செய்தியாளர்
-திருமலை குமார்.