மூணாறு: சித்திரபுரத்தில் உள்ள ரிசார்ட்டின் ஆறாவது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி. மூணாறில் உள்ள டி கேஸ்டில் ரிசார்ட்டில் இந்த விபத்து நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது பிரபா தயாள் என்ற ஒன்பது வயசு சிறுவன் உயிரிழந்தான்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்றைய தினம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரிசார்ட் அறையில் இருந்த நாற்காலியில் ஏறி சறுக்கிய ஜன்னலைத் திறந்த குழந்தை, நாற்காலி கவிழ்ந்ததில் ஜன்னல் வழியாக விழுந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கீழே விழுந்ததில் மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கமாலியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளத்தூவல் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மணிகண்டன் தேவிகுளம்.