தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா அதிமுக சார்பில் தமிழகத்தின் பல பகுதிகளில் கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதே போன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் மகேஷ் பால்ராஜ் நகரச் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்டோர் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அதன்படி பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் முன்னாள் யூனியன் சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் முன்னிலையில் கட்சியினர் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
இதை அடுத்து பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதோடு அங்கிருந்த பொது மக்களுக்கும் தொண்டர்களுக்கும்
இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.
இவ்விழாவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என் கே பெருமாள்,அதிமுக நிர்வாகிகள் வரதராஜ் பெருமாள், வேல்முருகன், ஆனந்த், கண்ணன், ரவி நாயுடு, சண்முக சாமி, மகளிர் அணிவார்டு கவுன்சிலர் பிரியா சாந்தி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.