
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைத்து அதற்கு மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ அவர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். இந்நிகழ்வில் அகில பாரத இந்து மகா சபா மாநில இளைஞரணி துணைத் தலைவர் சங்கர்ராஜா, மாவட்டத் தலைவர் பழனிச்சாமி, மாநில அர்ச்சகர் பேரவை அமைப்பாளர் பாலசர்மா, அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினர் எம்.ஆர்.வி.கவியரசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












