
தூத்துக்குடி மாநகராட்சி, தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6வது புத்தகத் திருவிழா (தொடர்ந்து படி தூத்துக்குடி)-க்காக தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட புகைப்படக்கண்காட்சி போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை (23.08.2025) மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள், மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி பி.கீதா ஜீவன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.இளம்பகவத், இ.ஆ.ப., அவர்கள் மாண்புமிகு மேயர் திரு.பெ.ஜெகன் அவர்கள், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் திரு.பானோத் ம்ருகேந்தர் லால், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட வன அலுவலர் திரு.ரேவதி ரமன், இ.வ.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.தி.புவனேஷ் ராம், இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணிபாலா.












