
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இருக்கன்குடி பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆகும்.இத்திருகோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டுஇருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
பாதயாத்திரை பக்தர்கள் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள கோவில்பட்டி ரோட்டரி சங்கத்தினர் சிவப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு,கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ரோட்டரி மாவட்ட முன்னாள் உதவி ஆளுநர்முத்துச்செல்வம், துணைத் தலைவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் பழனிக்குமார் அனைவரையும் வரவேற்றார்.
ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநர் பரமேஸ்வரன் கலந்துகொண்டு பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள பாதயாத்திரை பக்தர்களுக்கு சிவப்பு நிற ஒளிரும் ஸ்டிக்கரை ஒட்டி துவக்கி வைத்தார்.
இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பூல்பாண்டி,கண்ணன்,கருப்பசாமி,உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
-ராஜ்குமார்.












