
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை கடந்த சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களால் சிறந்த பணி சேவைக்கான பதக்கம் பெற்ற வால்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஆனந்தகுமார் அவர்களுக்கு வால்பாறை கால்பந்து சங்கத்தின் சார்பில் பூச்செண்டு வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பான பாராட்டு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், வால்பாறை கால்பந்து சங்க தலைவர் திரு. பிரமேஷ், இணைத்தலைவர் திரு. சதீஷ், ஒருங்கிணைப்பாளர் திரு. சையத் அலி, பொருளாளர் திரு. ராஜேஷ், செயற்குழு உறுப்பினர் திரு. சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
–M.சுரேஷ்குமார்.












