
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் ஸ்ரீ வடக்குவா செல்லி அம்மன் ஸ்ரீ பேச்சியம்மன் கோவில் ஆடிப்பெரும் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவாக மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சின்ன மாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் மதுரை தேனி திருநெல்வேலி உள்ள தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 45 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன சின்ன மாடு வண்டிக்கு போக வர 6 மைல் தூரமும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி 4 மைல் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது இந்த போட்டியை ஊர் பொதுமக்கள் விழா கமிட்டியாளர்கள் துவங்கி வைத்தனர் இப்போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் விழா கமிட்டி சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது மாட்டு வண்டி பந்தயத்தை சாலையில் இருபுறமும் நீண்ட தூரம் என்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












