
கோவை: பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள அண்ணா அவர்களின் திருஉருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது எம்ஜிஆர் நேசன் கோவை அன்பு செரிப் ஆர். பாக்கியராஜ் கமலகண்ணன் சாம்சன் பிரியமானவன் பிரகாஷ் வேளாங்கண்ணி சுதா முருகேசன் ஜீவானந்தம் காட்டூர் தனபால் முரளி மகேஷ் மற்றும் புரட்சித்தலைவரின் உண்மை பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணா அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
1944 இல் தொடங்கிய நீதிக் கட்சியிலிருந்து பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் 1949 இல் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கி 1967இல் ஆட்சியைப் பிடித்தவர் பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பின்னால் 1972 லே அண்ணாவின் பெயரில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற இயக்கத்தை தொடங்கி 1977-ல் ஆட்சியைப் பிடித்து 1987 வரை பொற்கால ஆட்சியாக சிறப்பான ஒரு ஆட்சியை தந்தார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்.
இன்று பேரறினர் அண்ணா அவர்களின் 117 ஆவது பிறந்தநாளில் அவர் தம் புகழைப் போற்றும் வகையிலே கோவை அவிநாசி சாலையில் உள்ள அவரது திருவுருவுச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது அண்ணாவின் லட்சியங்களை காப்பாற்றும் வகையில் புரட்சித்தலைவரின் கனவை நிறைவேற்றும் வகையிலும் மீண்டும் ஒருங்கிணைந்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அம்மா ஆட்சியை அமைக்க வேண்டும் என்று இந்த இனிய நாளில் சபதம் ஏற்போம் அண்ணா நாமம் வாழ்க புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் புகழ் வாழ்க…

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஷெரீப்.











