
அவசர வாகன ஊழியருக்கு இந்த நிலைமையா என பொதுமக்கள் குற்றச்சாட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான 108 வாகன ஓட்டுநர் மற்றும் அரசு பணியாளர்கள் தங்கும் இடமில்லாமல் தவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அவர்களுக்கு கொடுத்த வட்டாட்சியர் அலுவலகம் அருகாமையில் உள்ள தங்கும் இடம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுகும் நிலைமையில் உள்ளது. பிறர் உயிரை காக்க முதல் எடுத்து செல்லும் 108 வாகன ஓட்டுனருக்கு இந்த நிலைமையா என பொதுமக்களிடம் கேள்விக்குறியாக உள்ளது.
அரசு ஆரம்ப சுகாதார நிலைய 108 வாகன ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கும் இடமின்றி தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? எங்களுக்கு மாற்று இடம் கிடைக்குமா என வருத்தத்துடன் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-திவ்யக்குமார்.












