கோவையில் பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க போலீசாரின் புதிய முயற்சி!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மது அருந்துவதால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை 29, 2025 அன்று, மதுரையை சேர்ந்த சுரேஷ் குமார் (28) என்பவர் நண்பர்களுடன் மது அருந்தும் போது கொலை செய்யப்பட்டார். அதேபோல், செப்டம்பர் 4 அன்று குமார் (39) என்ற டிரக் உரிமையாளர், தனது டிரைவர் ஆனந்த குமாரை (27) மது அருந்தும் போது கொலை செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சம்பவங்கள் கோயம்புத்தூர் புறநகர் பகுதிகளில் அடிக்கடி நடக்கிறது. இதனால், கிராமப்புற காவல் துறையினர் ஒரு புதிய ரோந்து முறையை ஆரம்பித்துள்ளனர். இந்த ரோந்து முறை ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில், பொது இடங்களில் மது அருந்துவதை தடுக்க வேண்டும் கூறப்பட்டிருந்தது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். K கார்த்திகேயன் கூறுகையில், “குடிமகன்கள் அடிக்கடி செல்லும் 278 இடங்களை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். அங்கு ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம். தினமும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை போலீசார் லத்தி, கைவிலங்கு மற்றும் body camera உடன் ரோந்து செல்கிறார்கள். இந்த ரோந்து பணியின் மூலம் கடந்த மூன்று மாதங்களில் குற்றங்கள் குறைந்துள்ளது” என்றார்.
பொது இடங்களில் மது அருந்திவிட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது Section 4(1)(A) of the Tamil Nadu Prohibition Act சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலர் கூறுகையில், “Tasmac கடைகள் அருகில் மக்கள் மது அருந்த கூடுகிறார்கள். அந்த இடங்களில் நாங்கள் தொடர்ந்து ரோந்து செல்கிறோம். மது அருந்துபவர்களுக்கு அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சொல்கிறோம். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று நீதிமன்றத்தில் அபராதம் கட்ட வைக்கிறோம்” என்றார்.

மற்றொரு காவல் அதிகாரி கூறுகையில், “மது அருந்திவிட்டு தகராறு செய்வது, குடிபோதையில் வாகனம் ஓட்டுவது மற்றும் மதுவால் ஏற்படும் குற்றங்கள் குறைந்துள்ளது. பொது இடங்களில் மது அருந்துவது பற்றி புகார் அளிக்க பொதுமக்களுக்கு தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால், சமூக பாதுகாப்பு அதிகரித்துள்ளது” என்றார்.
இந்த ரோந்து பணியின் மூலம் பொது இடங்களில் மது அருந்துவது குறைந்துள்ளது. இதனால், குற்றங்களும் குறைந்துள்ளன. காவல் துறையினர் தொடர்ந்து ரோந்து சென்று பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். பொதுமக்களும் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். யாராவது பொது இடங்களில் மது அருந்தினால், உடனே காவல் துறைக்கு தகவல் கொடுக்கவும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts