கோவையில் ரேபிஸ் பரவலா? தடுப்பூசி நடவடிக்கைகள் தீவிரம்!!!

கோவையில் ரேபிஸ் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டரை மாதங்களில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் அமைப்புகள் கூறுகின்றன. ஆனால் கோவை மாநகராட்சி ஆணையர் தனியார் சார்பில் எடுக்கப்பட ரேபிஸ் பரிசோதனை முறையானதல்ல என்று கூறினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விலங்கு நல ஆர்வலர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 14 ஹாட்ஸ்பாட் பகுதிகள் கண்டறியப்பட்டு, நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேபிஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தருமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவையில் கடந்த சில மாதங்களாக ரேபிஸ் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இரண்டு மாதங்களில் 25 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனால், விலங்குகள் நல மருத்துவர்கள் இது ஒரு “பரவல் (outbreak)” என்று சந்தேகிக்கின்றனர்.
ரேபிஸ் நோய் பரவலைத் தடுக்க மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஆரம்பகட்ட பரிசோதனைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 14 இடங்கள் ஹாட்ஸ்பாட் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் இருந்து 49 நாய்கள் பிடிக்கப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட நாய்களில் 4 நாய்களுக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டிருந்தது. மற்ற நாய்கள் சீரநாயக்கன்பாளையம் விலங்குகள் பிறப்பு கட்டுப்பாட்டு மையத்தில் (Seeranaickenpalayam Animal Birth Control Centre) 4 முதல் 10 நாட்களில் இறந்துவிட்டன. இறந்த 45 நாய்களின் மூளை திசுக்களை பரிசோதனை செய்ததில், 25 நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Mission Rabies என்ற NGO குழுவினர் இறந்த நாய்களின் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்தனர். “Lateral Flow Assay (LFA)” என்ற சோதனை முறையும், Direct Fluorescent Antibody Test (dFAT) பெங்களூருவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளிலும் பயன்படுத்தப்பட்டன. அனைத்து தகவல்களும் Worldwide Veterinary Service (WVS) பயன்பாட்டில் பதிவு செய்யப்பட்டு, அரசாங்கத்திற்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேபிஸ் பரவலைத் தடுக்க தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஹாட்ஸ்பாட் பகுதிகளில் 4 கி.மீ சுற்றளவில் உள்ள தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் கணக்கெடுப்பின்படி, 2022-ல் தெரு நாய்களின் எண்ணிக்கை 1.11 லட்சமாக இருந்தது.

மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள், Mission Rabies மற்றும் Humane Animal Society ஆகிய NGOs இணைந்து ரேபிஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரேபிஸ் தொடர்பான தகவல்களுக்கு ஹெல்ப்லைன் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எண்: 98437 89491. ஜூன் மாதம் முதல் இதுவரை இந்த ஹெல்ப்லைனுக்கு 326 அழைப்புகள் வந்துள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் கூறுகையில், நகராட்சி மற்றும் கிராமப்புற பகுதிகளில் தடுப்பூசி நடவடிக்கைகள் மற்றும் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் தனியார் சார்பில் எடுக்கப்பட ரேபிஸ் பரிசோதனை முறையானதல்ல எனவும் சரியான பரிசோதனை முடிவுகள் அதிகாரப் பூர்வமாக கொடுக்கப்படும்” என்றார்.

கோவை மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் பூபதி கூறுகையில், 14 ஹாட் ஸ்பாட் பகுதிகளில் ரிங் வேக்சினேஷன் செய்யப்பட்டு உள்ளதாகவும், கடந்த 4 மாதங்களில் மாநகராட்சி எல்லைக்குள் 25 ஆயிரம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி மற்றும் 20 ஆயிரம் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

பொதுமக்கள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போடுவதோடு, தெரு நாய்கள் குறித்த தகவல்களையும் ஹெல்ப்லைனில் தெரிவிக்கலாம். இதன் மூலம் ரேபிஸ் நோய் பரவலை தடுக்க முடியும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts