
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம்மணியாச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ SIR பணிகள் குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதையடுத்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில்;
தேர்தலுக்கு முன்பாக சில பேர் ஆருடம் கூறுவார்கள் நான் முதலமைச்சர், நீ முதலமைச்சர் என்று அது இயற்கை
எந்த ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கூட முதலமைச்சர் என்று சொல்வார்கள். 10 சதவீதத்திற்கு கீழ் வாக்கு வங்கி உள்ளவர்கள் கூட முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவார்கள், தேர்தல் திருவிழாவில் இதெல்லாம் சகஜம்.
50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் 34 ஆண்டுகள் முதல்வர்கள் இருந்த இயக்கம் அதிமுக
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி முதன் முதலில் பிரச்சாரத்தை தொடங்கியது அதிமுக தான் என்றும், மக்கள் மற்றும் தொண்டர்களின் நம்பி தேர்தல் களத்திற்கு வந்துள்ள இயக்கம் அதிமுக, மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்பது அதிமுகவின் முழக்கமல்ல மக்களின் முழக்கமாக மாறி உள்ளது.
SIR என்ற வாக்காளர் பட்டியல் சீர்திருத்தம் என்பது புதிது கிடையாது. ஆனால் மத்திய அரசு சதி செய்வது போல திமுக ஒரு மாயையை ஏற்படுத்தி இன்றைக்கு தமிழக முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.
ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம், வழக்கு மன்றம் என்று சொல்லும் திமுக , ஆனால் SIR கள பணியில் திமுக தான் அதிகம் ஈடுபட்டு வருகிறது. இதிலிருந்து அவர்களுடைய இரட்டை நிலைப்பாடு தெரிகிறது.
தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கயத்தார் பகுதியில் ஒருவர் இறந்து ஐந்தாண்டு ஆகிவிட்டது அவரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய மனு கொடுத்த போதிலும் தற்போது வரை அவரை நீக்கம் செய்யவில்லை. இது போன்ற குழப்பங்களை நீக்குவதற்கு தான் இந்த SIR பணிகள் என்றும் தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அமைப்பு என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












