
எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பாரதியாரின் 144 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விழாவிற்கு பள்ளி இடைநிலை ஆசிரியர் இந்திரா தலைமை தாங்கினார்.பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் வெண்ணிலா முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் பாரதியாரைப் போன்று வேடமணிந்து அவரின் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.மாணவ மாணவியர்கள் பாரதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக பாரதியார் பற்றிய கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் வாணி நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.











