விளாத்திகுளம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கண்பரிசோதனை முகாம் நடைப்பெற்றது…

விளாத்திகுளம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,  கல்லூரி மற்றும் தூத்துக்குடி The Eye foundation Super Speciality Eye Hospitals இணைந்து தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பு 2025- 2026 அறிவிப்பு எண் 47 ன் படி, கல்லூரிச் செயலர் திரு. K. இராமு அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க, கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர். கா. குமாரி அவர்களின் தலைமையில் மாணவ – மாணவியர்களுக்கு கட்டணமில்லா கண்பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ மருத்துவமனையின் பொதுத்தொடர்பு அலுவலர் திரு. ச. ராம கிருஷ்ணன் காந்தி அவர்கள் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த முகாமில் சிறப்பாக தங்கள் பங்களிப்பினையாற்றினர். கல்லூரியில் பயிலும் மாணவ – மாணவியர்கள், பணிபுரியும் உதவிப்பேராசியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் கண் பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர். செ. பிரபாவதி அவர்கள் செய்திருந்தார்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts