​பொள்ளாச்சி கோட்டையைத் தக்கவைப்பாரா ஜெயராமன் – 2026 தேர்தல் களம் சூடுபிடிப்பு!!

பொள்ளாச்சி ​தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கொங்கு மண்டலத்தின் மிக முக்கியமான தொகுதியான பொள்ளாச்சியில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி வி. ஜெயராமன் மீண்டும் இத்தொகுதியில் களம் இறங்குவதால் மாநிலமே உற்றுநோக்கும் தொகுதியாக இது மாறியுள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த 2001 முதல் பொள்ளாச்சி மற்றும் உடுமலைப்பேட்டை தொகுதிகளில் தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்று தோல்வியே காணாதவர் என்ற பெருமையுடன் ஜெயராமன் வலம் வருகிறார்.

தொகுதி மக்களுடன் நேரடியாகத் தொடர்பு வைத்திருப்பது மற்றும் எளிமையான அணுகுமுறை அவருக்குப் பெரிய பலம் இம்முறை அதிமுக, பாஜக, பாமக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் மெகா கூட்டணியாகப் போட்டியிடுவது ஜெயராமனுக்கு கூடுதல் பலத்தைத் தருவதாகக் கருதப்படுகிறது.

மறுபுறம் கடந்த முறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (1,725 வாக்குகள்) வெற்றியைத் தவறவிட்ட திமுக, இம்முறை கூடுதல் முனைப்புடன் செயல்படுகிறது.
திமுக தலைமையிலான கூட்டணியில் இத்தொகுதி கொமதேக (KMDK)-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதால் கடும் போட்டி நிலவுகிறது.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் உள்ளூர் உள்கட்டமைப்பு பணிகளை முன்வைத்து திமுகவினர் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை பொள்ளாச்சியில் பழைய முகங்களுடன் புதிய சவால்களும் காத்திருக்கின்றன
முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் தவெக இளைஞர்களின் வாக்குகளைப் பிரிக்குமானால் அது அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சீமானின் நாம் தமிழர் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தனது வாக்கு சதவீதத்தை உயர்த்தி வருவதால் அவர்களின் நிலைப்பாடும் முக்கியத்துவம் பெறுகிறது.

​பொள்ளாச்சி பாலியல் வழக்கு உள்ளிட்ட சர்ச்சைகளைத் தாண்டி கடந்த முறை வெற்றி பெற்ற ஜெயராமன் இம்முறை அதிமுக-பாஜக கூட்டணி வாக்குகளை முழுமையாகப் பெறுவதில் உறுதியாக உள்ளார். இருப்பினும் திமுக கூட்டணியின் ஒருங்கிணைந்த செயல்பாடும் தவெக போன்ற புதிய சக்திகளின் வரவும் பொள்ளாச்சி ஜெயராமனின் வெற்றிப் பயணம் தொடருமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பொள்ளாச்சி தொகுதியின் முடிசூடா மன்னனாக ஜெயராமன் மீண்டும் நீடிப்பாரா அல்லது மாற்றம் வேண்டும் என மக்கள் புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பார்களா என்பது மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

மறவாமல் வாக்களிப்போம் வெற்றியைத் தீர்மானிப்போம்
​பொள்ளாச்சி தொகுதியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போவது அரசியல் கட்சிகளின் வியூகங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு வாக்காளரின் விரல் நுனியில் இருக்கும் அந்த ஒரு மை தான் என்ற சிந்தனையோடு

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தமிழக துணை தலைமை நிருபர் உங்கள்
-𝗦𝗧𝗔𝗥 𝗠.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts