
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வாகனம் நீண்ட நாட்களாக வாகனத்தின் பதிவு எண்ணை வாங்காமல் ஓடுகின்து.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://youtu.be/mSQcg7LQeaM

இந்த வாகனம் பள்ளிக்குழந்தைகளின் காலை உணவு திட்டத்திற்காக பயன் படுத்துகிறார்கள். ஆனால் முகக் கண்ணாடி உடைந்து பல நாட்கள் ஆகியும் நகராட்சி ஆய்வாளர் ஆணையர் மற்றும் அதிகாரிகள் கண்டும் காணாமல் செல்கின்றனர். காலை உணவுக்கு செல்லும் பொழுது கண்ணாடி உடைந்திருப்பதால் காற்று அடித்தால் டிரைவரின் முகம் மற்றும் உடம்பு சேதம் ஏற்படும். இதனைக் கண்டு இந்த முக கண்ணாடியை சீரமைக்கவும் வாகனத்தில் பதிவு எண்ணை சேர்க்க வேண்டும் என்றும் வாகன ஓட்டுனர் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
இந்த வாகனத்தை கண்காணித்து போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை செய்தியாளர்
-பேபி திவ்யக்குமார்.











