
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை தாலுக்கா அலுவலகத்தில் வரும் 16ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10:00 மணிக்கு ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) நடைபெற உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இக்கூட்டம் வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான பின்வரும் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் அளித்துப் பயன்பெறலாம்
முதியோர் உதவித்தொகை (OAP)
அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
பட்டா மாறுதல் மற்றும் பல்வேறு அரசு சான்றிதழ்கள்
பொதுமக்கள் அளிக்கும் இந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாகப் பரிசீலனை செய்யப்பட்டு தகுந்த விரைவு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வால்பாறை பகுதி பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தமிழக துணை தலைமை நிருபர்
உங்கள் STAR M. சுரேஷ்குமார்












