கட்டிடங்களுக்கு உதவும் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியது, ரெனாகான்!

பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட, இந்த போர்டுகள் உதவும்
இந்தியாவிலேயே முதன்முறையாக லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி (Laminar Flow Technology)–ஐப் பயன்படுத்தி, பல நிலையான கட்டுமானத் தீர்வுககளை அறிமுகப்படுத்துகிறது

கோவை,: ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம் (Renaatus Group), தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடேட் (Renaatus Product Private Limited) நிறுவனத்தின் மூலம் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை (Renaflex Fibre Cement Boards) அறிமுகப்படுத்தியது. பசுமையான, வேகமான மற்றும் பாதுகாப்பான கட்டிடங்களைக் கட்ட இந்த போர்டுகள் உதவும்.
₹350 கோடி முதலீட்டில், ரெனாகான், ஆந்திரப் பிரதேசத்தின் நாயுடுப்பேட்டையில் ஏ.ஏ.சி பிளாக்ஸ் (AAC Blocks), ரேபிட் வால் பேனல்ஸ் (Rapid Wall Panels) மற்றும் ஃபைபர் சிமெண்ட் போர்டு (Fibre Cement Board) ஆகியவற்றின் உற்பத்திக்காக உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த தொழிற்சாலையை நிறுவியுள்ளது. வெறும் 12 மாதங்களில் கட்டமைக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, உலகளவில் அளவுகோலாகக் கருதப்படும் லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி (Laminar Flow Technology)-யை இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தி, நவீன கட்டுமானத்தின் அதிகரித்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய துல்லிய-பொறியியல் வடிவமைப்பைக் கொண்ட நிலையான கட்டுமானப் பொருட்களை வழங்குகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இது குறித்து ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு. பி. செல்வசுந்தரம் (P. Selvasundaram) கூறுகையில், “கோவையில் ரெனாஃபிளக்ஸ் பிராண்ட் அறிமுகமாவது, முழுமையான கட்டுமானத் தீர்வுகள் வழங்குநராக மாறும் ரெனாகானின் பயணத்தில் ஒரு மைல்கல் ஆகும். தென்னிந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் துறை மற்றும் ரியல் எஸ்டேட் மையங்களில் ஒன்றாகிய கோவை, நவீன மற்றும் நிலையான கட்டுமான முறைகளை விரைவாக ஏற்றுக்கொண்டு வருகிறது. எங்களின் முதன்மை குடியிருப்புத் திட்டமான ‘வரம்’ (VARAM) மூலம் ஏற்கனவே கோயம்புத்தூரில் வலுவான இருப்பை உருவாக்கியுள்ள நிலையில், தற்போது ரெனாஃபிளக்ஸ் அறிமுகத்தின் மூலம், இச்சந்தையின் மீது நாங்கள் கொண்டிருக்கும் நீண்டகால அர்ப்பணிப்பை உறுதிப்படுத்துகிறோம்.

நாங்கள் தொடங்கியுள்ள ₹350 கோடி முதலீட்டிலான இந்தப் புதிய தொழிற்சாலை, மேம்பட்ட உற்பத்தி, புதுமை மற்றும் நிலைத்தன்மையை ஒருங்கிணைத்து இந்தியாவின் கட்டுமானத் துறைக்காக உலகத் தரத்திலான தயாரிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எங்களின் நீண்டகாலப் பார்வையைப் பிரதிபலிக்கிறது.

உலகளவில் நிரூபிக்கப்பட்ட லேமினார் ஃப்ளோ டெக்னாலஜியை இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம், நாங்கள் உயர்ந்த வலிமை, துல்லியம், நீடித்த தன்மை மற்றும் ஒரே மாதிரியான தரத்துடன் கூடிய ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை வழங்க உள்ளோம். அதே சமயம் வேகமான, பாதுகாப்பான மற்றும் பசுமையான கட்டுமானத்திற்கும் உதவுகிறோம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts