பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பிரம்மாண்ட கூடைப்பந்து போட்டிகள்: ஆகஸ்ட் 26 முதல் தொடக்கம்!

கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள அதிநவீன சர்வதேச உள்விளையாட்டு அரங்கில், வரும் ஆகஸ்ட் 26 முதல் 30ஆம் தேதி வரை மாலை நேரங்களில் கூடைப்பந்து போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளன. இத்தொடருக்கான அனைத்து சிறப்பு ஏற்பாடுகளையும் பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முனைவர் ஆர். ருத்ரமூர்த்தி ஆகியோர் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பரிசளிப்பு விழாவில், பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார்.

இவ்விழாவில், இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவரும், தமிழ்நாடு கூடைப்பந்து கழகத் தலைவரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு ஆதாவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். மேலும், சக்தி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம். மாணிக்கம் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி. செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்பார்கள் என்று பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் டி. பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-சீனி,போத்தனுர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts