சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் ஏழு பேரை கடித்த வெறிநாய்! பீதியில் மக்கள்!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலபட்டியைச் சேர்ந்தவர் பரிதா (வயது 38), பஞ்சவர்ணம் மற்றும் 8 வயது சிறுமி ஒருவர் மூவரும், இன்று காலை ஆறு மணி அளவில் அவர்களது வீட்டினருகே வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருந்த பொழுது திடீரென்று அங்கு வந்த வெறிநாய் ஒன்று அவர்களைக் கடித்துக் குதற ஆரம்பித்தது.
அதிகாலையில் அவர்களது அலறலைக் கேட்ட கிராமத்தார்கள் ஓடிவரவே, அந்த வெறிநாய் தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும், 13 வயது சிறுமி ஒருவர், 9 வயது சிறுவன் மணிமாறன் (55), பஞ்சவர்ணம் (60) மற்றும் சுசீலா (34) ஆகியோரை இந்த வெறிநாய் கடித்ததால், அருகிலுள்ள வெவ்வேறு கிராமங்களிலிருந்து சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு பணியிலிருந்த தலைமை மருத்துவர் அய்யன் ராஜ் உடனடியாக விரைந்து செயல்பட்டு, நாய்க்கடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார். வெறிநாயால் கடிபட்டவர்கள் தற்போது சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
கிராம பகுதியில் சுற்றித் திரியும் அந்த வெறிநாயால் மேலும் பலர் கடிபட வாய்ப்பு உள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்று அதிகாலை முதலே 8 வயது முதல் 55 வயது வரை உள்ள ஏழு நபர்கள் நாய்க்கடியினால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சிங்கம்புணரி சுற்று வட்டாரத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வெறிநாயை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

– அப்துல் சலாம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp