பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அருகே புலி நடமாட்டம்..!!

பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் புலி நடந்துசெல்லும் காணொலி தற்போது வைரலாகப் பரவிவருகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள்பட்டு ஆறு வனச்சரகப் பகுதிகள் உள்ளன.

இதில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் பகுதி மிகவும் பிரபலமான சுற்றுலா பகுதி ஆகும். இங்கு யானை, புலி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கருநாகம், புள்ளிமான், காட்டுப்பன்றி அபூர்வ தாவரங்கள், பறவைகள் உள்ளன.
பிரபலமான யானைகளை வளர்க்கும் முகாமாக கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. டாப்சிலிப் வரும் சுற்றுலாப் பயணிகள் வனத் துறை வாகனம் மூலமாக யானைகள் வளர்ப்பு முகாமுக்கு அழைத்துச் செல்கின்றனர்.

டாப்சிலிப்பிலிருந்து கோழிகமுத்தி யானைகளை வளர்க்கும் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும்பொழுது வனத் துறைக்குச் சொந்தமான அம்புலி இல்லம் அருகே பகலில் புலி ஒன்று வனப்பகுதியில் நடந்துசென்றுள்ளது.
வைரல் காணொலி!இந்தக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் அவர்களது செல்போனில் காணொலியாக எடுத்தனர்.

தற்போது, வனப்பகுதியில் புலி நடந்துசெல்லும் இந்தக் காணொலி பரவலாகப் பகிரப்பட்டுவருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp