அக்னி நட்சத்திரம் என சொல்லக்கூடிய கத்திரி வெயில் காலம் அடுத்த மாதம் மே 4-ந்தேதி தொடங்குகிறது மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு கத்திரி வெயில் தாக்கம் நீடிக்கும். பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். ஒரு சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியை பதிவாகும் இதனால் பகல் நேரத்தில் வெப்ப காற்று அதிகமாக இருக்கும் இரவு நேரத்திலும் அதன் தாக்கம் அதிகமாக காணப்படும்.
எதிர்வரும் மே 11 முதல் 24-ந்தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரத்தில் அதிகம் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
கோடை காலம் தொடங்கிவிட்டதால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும் காய்ச்சி வடிகட்டிய குளிர்ந்த நீர், மோர், உப்பு போட்ட எலுமிச்சை பழச்சாறு குடிக்கலாம். பனை நுங்கு, இளநீர் நீரா பானம்
வெள்ளரி, தர்பூசணி மற்றும் பிறவகை பழங்கள் சாப்பிடலாம்.
மீன்கள் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜியும், சைனஸ் போன்ற பிரச்சினைகளும் ஏற்படுகிறது
இதனால் கத்திரி வெயில் காலகட்டத்தில் மீன்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது என்பதைவிட
தவிர்க்க வேண்டும் என்பதே சிறப்பு.
கடும் வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு சென்ற உடன் சிறிது நேரம் மின்விசிறியின் கீழ்அமர்ந்து, தலையில் உள்ள வியர்வை காய்ந்த பின்னர் பானங்கள் அருந்துவது நல்லது.
குளிர்பானங்களை முற்றிலுமாக தவிர்த்துவிட வேண்டும்.
காய்ச்சி வடிகட்டிய நீர் 10 அல்லது 15 டம்ளர் தினசரி குடிக்க வேண்டும். காரமான உணவு வகைகள் மற்றும் பான்பராக் பாக்கு போடுவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது
கோடை காலங்களில் இவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் கத்திரி வெப்பத்திலிருந்து ஓரளவு நம்மை காத்துக்கொள்ள முடியும்.
செய்தியாளர்
-கலையரசன், மகுடஞ்சாவடி.