தூத்துக்குடி தென்பாகம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ரவுடி உட்பட 2 பேர் கைது!!

தூத்துக்குடிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுப்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாலாஜி மேற்பார்வையில் தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையிலான போலீசார் நேற்று (22.04.2022) ரோந்து பணியில் ஈடுபட்டபோது, தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்தவர்களான ஆதிமூலம் மகன் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் (24) மற்றும் வெட்டும்பெருமாள் மகன் ராஜா (38) ஆகிய 2 பேரும் என்பதும் அவர்கள் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களிடம் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிவந்தது.
உடனே மேற்படி போலீசார் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மற்றும் ராஜா ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் முருகன் (எ) ஓட்டப்பல் முருகன் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உட்பட 10 வழக்குகளும், புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.எதிரி ராஜா மீது தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கஞ்சா விற்பனை உட்பட 5 வழக்குகளும், முத்தையாபுரம் காவல் நிலையத்தில் ஓரு வழக்கும் என மொத்தம் 6 வழக்குகள் உள்ளது குறிப்பிடதக்கது.

-துல்கர்னி உடுமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp