அனுமதி மறுப்பு…! கொந்தளித்த கரூர் எம்பி..!! பரிதவித்த காவல்துறை!!

அனுமதி மறுக்கப்பட்டதால் தடுப்புகளை தாண்டி ஏறி குதித்து உள்ளே சென்ற கரூர் எம்.பி!!

தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கரூர் கம்பம் ஆற்றுக்கு விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது – திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் அனுமதி வழங்கப்பட்டது. செய்தியாளர்களுக்கு அனுமதி பாஸ் கொடுத்தும் நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்காததால் வாக்குவாதம் ஏற்பட்டது. செய்தியாளர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் உள்ள மாரியம்மன் ஆலயங்களில் மிகவும் விமர்சையான ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் ஆலயத்தின் வைகாசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றது. முன்னதாக அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக மாநகர உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், கரூர் மாரியம்மன் ஆலயத்திலிருந்து கச்சேரி பிள்ளையார் ஆலயத்தின் வழியாக கரூர் ஐந்து ரோடு அமராவதி ஆற்றிற்கு கம்பம் கொண்டு செல்லப்பட்டது. வழிநெடுகிலும், திமுக பிரமுகர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் என்று ஏராளமானோர் வழிநெடுகிலும் விஐபி பாஸ் வைத்திருப்பவர்கள் போல சென்றனர்.

இந்நிலையில்,. ஏற்கனவே இந்த திருவிழாவிற்காக கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். இதுமட்டுமில்லாமல், இந்த திருவிழாவிற்காக கரூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களை சார்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக ஈடுபட்டிருந்தனர்.


கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சிக்காக இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் கூறினால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் என்று பசுபதிபாளையம் ஆய்வாளர் செந்தில்குமார் கூறிய நிலையில், பத்திரிக்கையாளர்கள், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிகழ்ச்சிக்கான அனுமதி அட்டையுடன் காத்திருந்தும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், சில மணி நேரம் காத்திருந்த கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பொறுமைக்கொரு எல்லை உண்டு என்கின்ற விதத்தில் கம்பிவேலிகளை தாண்டி குதித்தார். ஆற்றில் கம்பம் விடும் நிகழ்ச்சியில் முழுக்க, முழுக்க திமுக நிர்வாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மட்டுமல்லாமல், திமுக மாமன்ற உறுப்பினர்கள் மட்டுமேஅனுமதிக்கப் பட்டதாக தெரிகிறது.

செய்தி சேகரிப்பதற்காக பாஸ் வழங்கப்பட்ட செய்தியாளர்கள் யாரையும் இந்நிகழ்ச்சியில் அனுமதிக்கப்படவில்லை, பல ஆண்டுகாலமாக அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரித்து வந்த செய்தியாளர்களுக்கு திடீரென்று அனுமதி மறுத்த சம்பவம், கரூர் வரலாற்றிலேயே புதுமையான ஒரு சம்பவமாக இருந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ராஜேந்திரன்.

Leave a Comment

One Response

  1. காலம் பதில் சொல்லும். தி. மு. க.
    விக்கு, காங்கிரஸ் பத்தி தெரியல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp