கோவை மாநகராட்சி சார்பாக, தூய்மை பணிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு – கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி மேயர் துவக்கி வைத்தார்!

கோவை மாநகராட்சி சார்பாக, தூய்மை பணிக்கான மக்கள் இயக்கத்தின் விழிப்புணர்வு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்..

கோவை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை அண்மையில் தொடங்கி வைத்தார்.இதில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் மூலம் எனது குப்பை – எனது பொறுப்பு என்ற திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் குப்பைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோவை மாநகராட்சி சார்பில் கணபதி,புலியகுளம்,குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் விழிப்புணர்வு மற்றும் கழிவுகளை அகற்றும் பணியினை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமர் துவக்கி வைத்தார்.இதில் தனியார் கல்லூரி மாணவர்கள் குறிச்சி குளத்தில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தூய்மை பணாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதில் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், துணை ஆணையர் சர்மிளா, சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன்,தெற்கு மண்டல உதவி ஆணையர் அண்ணாதுரை,வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல்,தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி,மாமன்ற உறுப்பினர்கள் சரளா,குணசேகரன்,கார்த்திகேயன்,அஸ்லாம் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து, மஞ்சப்பையை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கி உறுதி மொழி எடுத்து கொண்டனர்.இதில் உதவி ஆணையர், உதவி பொறியாளர் மகேஷ்,தூய்மை பணியாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

– சீனி,போத்தனூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp