பாலாற்றில் 85வயதுடைய முதியவர் இறந்த நிலையில் கண்டெடுப்பு! போலீசார் விசாரணை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு உட்பட்ட ஜமீன்கோட்டாம்பட்டி அருகில் உள்ள
பாலாற்றில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஜூலை 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கோட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து வந்த கோட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் அவர்கள் ஆற்றில் இறந்த நிலையில் கிடந்த முதியவரை மீட்டு, அங்குள்ளவர்களிடம் விசாரித்ததில் இறந்தவர் சிங்காநல்லூர் ஊரைச் சார்ந்த ரத்தினசாமி சுமார்(85) வயது உடையவர் எனத் தெரிய வருகிறது.

மேலும் இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆனைமலை தமுமுக ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

-அலாவுதீன், ஆனைமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp