சென்னை: அஸ்தினாபுரம் நெமிலிச்சேரி சேர்ந்த லக்ஷ்மிஸ்ரீ எனும் பள்ளி மாணவி அஸ்தினாபுரம் நேரு நகரில் உள்ள எஸ்சிஎஸ் மேல்நிலைப்பள்ளிஇல் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் இன்று காலை சுதந்திர தின விழாவை பள்ளியில் முடித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது குமரகுன்றம் பஸ் ஸ்டாப் தாண்டியவுடன் அரசு பேருந்து 52ஹெச் அஸ்தினாபுரம் to பொழிச்சலூர் செல்லும் அரசு பேருந்து அவர் தலையின் மீது ஏறி சம்பவ இடத்திலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
↓↓↓Please Subscribe This Channel to get current news ↓↓↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதற்கு பொதுமக்கள் இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளதாகவும் இரு புறங்களிலும் கடைகள் ஆக்கிரமித்து இருப்பதாலும் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன. இதற்கு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று கோரிக்கை விடுக்கின்றனர்.
-செந்தில் முருகன், சென்னை தெற்கு.