இந்தியாவின் முதல் குடிமகன் முப்படைகளின் தலைவர் இன்று பல முன்னணி பொறுப்புகள் அனைத்தும் குடியரசுத் தலைவருக்கே சாரும். இந்த நிலையில் நம் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பே குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக கூட்டணி வேட்பாளரான திரவுபதி முர்மு வெற்றி பெற்று தற்போது அவர் குடியரசுத் தலைவராக பதவியில் இருந்து வருகிறார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் குடியரசு தலைவர் தேர்தலோடு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக கூட்டணி கட்சியினர் ஜெகதீஷ் தன்கர் என்பவரை வேட்பாளராக நிறுத்தியது.
அவரும் வெற்றி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனால் அவரின் பதவியேற்பு இன்றைய தினம் நடைபெறுகிறது. நாட்டின் 14 வது குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீஷ் தன்கர் இன்றைய தினம் பதவி ஏற்று கொள்கிறார்.
ஜெகதீஷ் தன்கருக்கு புதிய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.