ஓசூர் பேருந்து நிலையத்திலிருந்து பெங்களூர் செல்லும் சாலை உள்ளது.அந்தப் பகுதியில் ஒரு வழிப்பாதையாக ஒரு சாலைஉள்ளது. அந்த சாலையில் விதிமுறையை மீறி இருசக்கர வாகனங்களும் 3 சக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் எதிரே வருகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவ்வாறு வரும் பொழுது மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்கள் இதை உணர்ந்து போக்குவரத்து விதியை மதித்து நடக்க வேண்டும்.
இவ்வாறு விதிமுறையை மீறி செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினர் தகுந்த அபராதம் விதித்து இதுபோன்று போக்குவரத்து விதிமுறைகள் மீறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஏ.பழனி.