நம் நாட்டில் பல இடங்களில் விதவிதமான முறையில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சிலை கடத்தல் முயற்சியானது அரசாங்கத்திற்கு எதிராக சிலர் செய்து கொண்டு வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆயினும் கூட சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் இதனை கண்டுபிடித்து அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சிலையை பறிமுதல் செய்வர். இந்த நிலையில் பல மாதங்களுக்கு பின்பு காணாமல் போன சிலை ஒன்று வேறொரு நாட்டில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி கும்பகோணம் அருகே காணாமல் போன பார்வதி சிலை தற்போது அமெரிக்காவின் தலைநகரான நியூயார்க்கில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாண்டதோட்டம் நடனபுரீஸ்வரர் சிவன் கோவில் சிலை போன் ஹவுஸ் ஏல இல்லத்தில் உள்ளது என்று காவல்துறை அறிவித்துள்ளது. சிலையை மீட்டுக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் அளித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரிசங்கர் கோவை வடக்கு.