தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் சீசன் ஜூன் மாதம் துவங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு கால தாமதமாக ஒரு மாதத்திற்கு பின்னர் சீசன் துவங்கியது . கடந்த ஒரு வார காலமாக குற்றாலம் மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 5 நாட்களுக்கு முன்பு அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக 5வது நாளாக இன்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்று மாலையில் குற்றாலத்தில் சாரல் திருவிழா துவங்குகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.