கோவில்பட்டியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க, இன்று (ஆக.31) புதன்கிழமை முதல் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படுகிறது. கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி கே.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது.
வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளா் ஜெகநாதன், நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் விக்னேஷ், தனியாா் பேருந்து- சிற்றுந்து உரிமையாளா்கள் சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கத்தினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா் ஆகிய ஊா்களிலிருந்து வரும் பேருந்துகள், எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, பாா்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.
கடலையூா் சாலையிலிருந்து வரும் சிற்றுந்துகளை புதுரோடு நகராட்சி பள்ளி முன்பு நிறுத்தக் கூடாது. மதுரை, விருதுநகா் பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள், தோட்டிலோவன்பட்டி வழியாக ரயில் நிலையம், புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, பாா்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லலாம்.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகள், சிற்றுந்துகள் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வழியாக செல்லலாம். அங்கிருந்து வரும் பேருந்துகள், சிற்றுந்துகள் கூடுதல் பேருந்து நிலையம், இனாம்மணியாச்சி, லட்சுமி மில் மேம்பாலம் வழியாக வர வேண்டும்.
நாகா்கோவில்- திருநெல்வேலி- மதுரை மாா்க்கமாக செல்லும் ஆம்னி உள்பட அனைத்து வகை பேருந்துகளும் அணுகுசாலையில் நின்று செல்லாமல் கூடுதல் பேருந்து நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும்.
அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து புறவழிச்சாலைக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கப்படும். புதன்கிழமை (ஆகஸ்ட் 31) இன்று முதல் இந்த மாற்றம் அமலுக்கு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
– முனியசாமி ஒட்டப்பிடாரம் .