கோவை கே.ஜி திரையரங்கில் சினம் திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சினம் படத்தின் கதாநாயகன் நடிகர் அருண் விஜய் மற்றும் நடிகை பல்லக் லால்வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய,நடிகர் அருண் விஜய் ,தம்முடைய முந்தைய படமான யானை படத்தின் வெற்றிக்கு பிறகு சினம் மூலமாக சந்திக்கிறேன் யானை படத்திற்கு கோவையில் இருந்து தான் இருந்து ஆரம்பித்தோம் அதபோல வர உள்ள சினம் படத்திற்கும் கோவையில் தான் ஆரம்பித்து உள்ளதாக கூறிய அவர், முக்கியமான விஷயத்தை வைத்துதான் சினத்தை நாங்கள் எடுத்துள்ளோம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
என்னுடைய சாதாரண எதார்த்தமான கேரக்டர் இந்த படத்தில் உள்ளது சாதாரண சப்-இன்ஸ்பெக்டர் அவனுக்கும் ஒரு குடும்பம் லவ் குடும்பம் அதில் ஆரம்பித்து சூழ்நிலை அவனை வேறு இடத்திற்கு கொண்டு செல்கிறது அதனுடைய எந்த இடத்தில் கோபம் அடைகிறான் என்பதை அழகாக இயக்குனர் அமைத்துள்ளார்.
செப்டம்பர் 16ஆம் தேதி சினத்தோடு பார்க்க வருகிறோம் ஒவ்வொரு படத்திற்கும் நீங்கள் வித்தியாசமான அனுபவ முயற்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளீர்கள் அதே மாதிரி இந்த படமும் உங்களை நல்ல பொழுதுபோக்காக அமையும் ஸ்பெஷல் கன்டென்ட் இருக்கிறது.
விக்டர் மிகப் பிடித்த கதாபாத்திரம் எனக்கு ஆக்சன் மூவி நன்றாக வருகிறது. கதை அதே போல வருகிறது. எமோஷனலாட ஆக்சன் படமும் மக்களிடம் கொண்டு செல்கிறது எனக்கும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது ஆக்சன் மக்களுக்கு பிடித்தமான இருக்கிறது.
கதையை மட்டுமே நாங்கள் தேர்வு செய்கிறோம் ஜனவரியில் இருந்து எந்த படத்தையும் கமிட் செய்யவில்லை நோய் தொற்று காலத்தில் 2 வருடம் படம் எதுவும் வரவில்லை. வரிசையாக அடுத்தடுத்து வருகிறது. திரில்லர் பேய் படம் அறிவழகன் படம் ஈரம் செய்த மாதிரி எனக்கு ஒரு ஸ்கிரிப்ட் செய்யுங்கள் என கேட்டு உள்ளேன் என தெரிவித்தார்.
– சீனி, போத்தனூர்.