கோவையில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலி நகைகளை வைத்து மோசடி!! பெண் உதவி மேலாளர் கைது!!

கோவை தனியார் தங்க நகை கடன் நிறுவனத்தில் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பயன்படுத்தி போலி நகைகளை வைத்து பணம் எடுத்து மோசடி செய்த பெண் உதவி மேலாளர் கைது செய்யபட்டுள்ளார். கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ici fincorp என்ற நிறுவனத்திற்கு தமிழகத்திலும் பல்வேறு கிளைகள் உள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த நிறுவனம் தங்க நகைகளை அடமானமாக பெற்றுக் கொண்டு அதற்கு பணம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கோவை குனியமுத்தூர் கிளையில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கமான தணிக்கை நடைபெற்றது. அப்போது அந்த நிறுவனத்தில் போலி தங்க நகைகளை அடகு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிளையில் உள்ள அனைத்து நகைகளையும் தணிக்கை செய்து பார்த்தபோது வாடிக்கையாளரின் ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 598 கிராம் தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டு அதற்கு ஈடாக 40 .80 லட்சம் பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

வாடிக்கையாளர்களின் பெயரில் ici fincorp நிறுவனத்தின் குனியமுத்தூர் கிளை தலைவர் கார்த்திகா.மேலாளர் சரவணன் .உதவி மேலாளர் சத்யா ஆகியோர் கூட்டு சேர்த்து 40.80லட்சம் பணத்தை எடுத்து மோசடி செய்தது தனிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவனத்தில் மண்டலமேலாளர் வினோத்குமார் கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்தார் புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த நிறுவனத்தில் உதவி மேலாளர் சத்யா என்பவரை கைது செய்தனர்

மேலும் தலைமறைவான கிளை தலைவர் கார்த்திகா மற்றும் மேலாளர் சரவணன் ஆகிய இருவரையும் குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர் வாடிக்கையாளர்கள் ஆவணங்களை பயன்படுத்தி தனியார் நிறுவன ஊழியர்களை ரூபாய் 40.8 லட்சம் பணத்தை மோசடி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp