சிக்னல் சரியாக வேலை செய்யாததால் போக்குவரத்து நெரிசலில் சிக்கும் நான்கு முனை சந்திப்பு! நடவடிக்கை எடுப்பார்களா அரசு அதிகாரிகள்!!

கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியில் டவுன்ஹாலில் இருந்து பேரூர் நோக்கி செல்லும் சாலையும் காந்தி பார்க்கில் இருந்து பொன்னையராஜபுரம் வழியாக செல்லும் சாலையும் புட்டுவிக்கி பாலத்தில் இருந்து செல்வபுரம் நோக்கி செல்லும் சாலையும் சந்திக்கும் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் சரியாக வேலை செய்வதில்லை.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த சூழ்நிலையில் பள்ளி மாணவ மாணவியர் பள்ளி செல்லும் நேரமாகிய காலை,மாலை மற்றும் பொதுமக்கள் தங்களுடைய வேலைகளுக்கு செல்லும் நேரமாகிய காலை, மாலை என இரு வேலைகளிலும் இருசக்கர வாகனங்களும், நான்கு சக்கர வாகனங்களும், பள்ளிக் குழந்தைகளை ஏற்றி செல்லும் வாகனங்களும் பொது போக்குவரத்துகளும் அதிகளவில் உள்ளது.

இந்த நான்கு முறை சந்திப்பில் சரியான சிக்னல் இல்லாத காரணத்தால் வாகனங்கள் முன்பின் சென்று எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகன விபத்துகளும் ஏற்படுகின்றன. பள்ளி செல்லும் குழந்தைகளும் வேலைக்குச் செல்பவர்களும் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகின்றனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

எனவே இந்த நான்கு முறை சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னலை சரி செய்து போக்குவரத்து நெரிசல் இல்லாமல் வாகனங்கள் சென்றுவர வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஏ.பழனி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp