சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்குத் தேவையான உபகரணங்களை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் இணைந்து பல்வேறு கட்டங்களாக வழங்கி வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதன்படி நேற்று (24.08.2022) சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள தொடக்கப் பள்ளியின் எண் 3க்குச் சென்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும்
மனிதநேய மக்கள் கட்சியினர், அங்கு பயிலும் 140 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான பேனா, பென்சில், ஸ்கேல் அடங்கிய பாக்ஸ் மற்றும் வாய்ப்பாடு போன்ற உபகரணங்களைத் தந்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு சிங்கம்புணரி பேரூராட்சி துணைத் தலைவர் இந்தியன் செந்தில் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில், பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி, சிங்கம்புணரி தமுமுக நகர் தலைவர் அப்துல் வஹாப், நகரச் செயலாளர் சேக் அப்துல்லா, நகர பொருளாளர் சேக் அப்துல்லா, மமக நகரச் செயலாளர் ஜாபர், மற்றும் நகர நிர்வாகிகளும்,பேரூராட்சி கவுன்சிலர்கள் அலாவுதீன், ஜெயசித்ரா மற்றும் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.