சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் அருகே உள்ள கே.இடையபட்டியை சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. கடந்த மே மாதம் 2ஆம் தேதி பட்டப்பகலில் இவரது வீட்டின் கதவை உடைத்து 30 பவுன் நகை திருடப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து உலகம்பட்டி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனிடையே நேற்று, எஸ்.புதூர் அருகே உள்ள கே.புதுப்பட்டியில் உலகம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் கலாராணி தலைமையில் தலைமை காவலர் சரவணன் உள்ளிட்ட காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேவன்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவா என்ற வேலு (வயது 27) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்.
விசாரணையில் கடந்த மே மாதம் 2ஆம் தேதி கே.இடையபட்டி விவசாயி பழனிச்சாமி வீட்டில் கதவை உடைத்து 30 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றது இவர்தான் என்பது தெரியவந்தது. தொடர்ந்து சிவாவை கைது செய்த காவல்துறையினர், சிங்கம்புணரி உரிமையியல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி, மேலூர் கிளைச் சிறையிலடைத்தனர்.
மேலும் சிவாவிடமிருந்து 15 பவுன் நகையை மீட்ட உலகம்பட்டி காவல்துறையினர், அந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அவருடன் ஈடுபட்ட தேவன்பட்டியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
– பாரூக், சிவகங்கை.