டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்துகள் கொடுக்கக் கூடாது! விற்பனையாளர்களுக்கு டிஎஸ்பி கடும் எச்சரிக்கை!!

டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளில் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி எச்சரித்துள்ளார். வேலூர் மாவட்டம் முழுவதும் போதை பொருளை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சிறப்பு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.இந்த போதை பொருட்களை தடுப்பதற்காக மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் அலுவலகத்தில் மருந்து விற்பனையாளர்களுக்கு சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஎஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டு மருந்து விற்பனையாளர்களிடம் பேசினார்.அவர் டாக்டர் சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். அதன் பிறகு சில மருந்துகளை போதைப் பொருளாக பயன்படுத்துவதாக தகவல் வெளியாகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதில் குறிப்பாக மனநோயாளிகள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகள் போதைக்காக பயன்படுத்துவதாக புகார் இருந்துள்ளது. எனவே டாக்டர் சீட்டு இல்லாமல் வருபவர்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகளை விற்பனையாளர்கள் வழங்க கூடாது என்றார் மேலும் பார்சல் மூலமாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வெளியானதால் பார்சல் நிறுவன ஊழியர்களுக்கும் போதை பொருள் தொடர்பான விழிப்புணர்வு எற்படுத்தப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-P. இரமேஷ், வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp