டியூஷன் சென்று வந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் காந்தி தெருவை சேர்ந்த கருணாகரன்-நந்தினி தம்பதியின் மகள் சொர்ணலட்சுமி.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் எப்போதும் போல பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவி மாலை அருகில் உள்ள டியூஷனுக்கு சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய மாணவி கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால் அவரது தாய் சந்தேகமடைந்து கழிவரையின் கதவை தட்டியுள்ளார்.
கதவு திறக்கப்படாத காரணத்தினால் கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பார்த்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சொர்ணலட்சுமி உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஹரி சங்கர், கோவை வடக்கு.